பாகிஸ்தான் புதிய உயர் ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிதாக நியமனம் பெற்ற உயர் ஸ்தானிகரான மதிப்புக்குரிய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் முகமட் சாட் கஹடக் அவர்கள் இம் மாதம் 11 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இவர்கள் இருவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், முப்படையினர்களது பயிற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இச்சந்திப்பின் இறுதியில் இவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் சஜாட் அலி அவர்களும் இணைந்து கொண்டார்.
latest Nike release | Zapatillas de running Nike - Mujer