06th March 2020 17:44:37 Hours
இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே அவர்கள் தான் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு 06 ஆம் திகதி வௌளிக்கிழமை பாதுகாப்பு தலைமை பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சிவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இரு தசாப்த கால போர் நினைவுகள் மற்றும் ஏனைய பல விடயங்களை பற்றியும் கலந்துரையாடினர். மேஜர் ஜெனரல் முதலிகே அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவை செய்துள்ளார். மற்றும் குறிப்பாக முஸ்லிம் பயங்கரவாதிகளினால் சமீபத்திய நடாத்திய ஈஸ்டர் தாக்குதலின் போது இவர் தனது பங்களிப்பினை வழங்கினார்.
ஓய்வு பெற்றுசெல்லும் இந்த சிரேஷ்ட அதிகாரி அவர்கள் இராணுவ தளபதியின் வாழ்துக்கள் மற்றும் சிந்தனைக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். சந்திப்பின் இறுதியில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் இந்த அதிகாரிக்கு தனது பாராட்டு மற்றும் வாழ்துகள் தெரிவித்துக் கொண்டதுடன் நினைவு சின்னத்தினையும் வழங்கினார். Sports brands | Archives des Sneakers