Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2020 10:49:18 Hours

இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய போதைப் பொருளுடன் நபர் கைது

கிளிநொச்சி இரனைமடு சந்தியில் (1) ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு இராணுவ புலனாய்வு படையணியினால் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய 65 கிராம் நிறையுடைய போதைப் பொருளுடன் (25) வயதுடைய நபரொருவர் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நபர் வாகனமொன்றில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வந்துள்ளார் என்று விசாரனையின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப் பொருட்களை கொண்டு வந்த சந்தேக நபர் மற்றும் அவரது போதைப் பொருட்கள் இராணுவத்தினரால் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டன.

போதைப் பொருள் பாவனைகளை தடுப்பதற்காக நாட்டில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது பரிந்துரைப்பின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Authentic Sneakers | シューズ