Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2020 17:03:41 Hours

அம்பலன்முல்லவில் இராணுவத்தினரால் தீயனைப்பு பணிகள் முன்னெடுப்பு

சீதுவ பிரதேசத்தை அன்மித்த அம்பலன்முல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேட்டில் திடீரென ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்தை, 14ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 141ஆவது படைப் பிரிவின் இராணுவப் படையினர் தீயனைப்பு படையினர், கடற்படை ,விமானப் படையினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர்களுடன் ஒன்றிணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் இச் சம்பவமானது வியாழக் கிழமை (20) மாலை 4.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ்,மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களின் கண்காணிப்பின் கீழ், 141ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் சமில முனசிங்க அவர்களின் தலைமையிலான படையினர்கள் இத் தீயனைப்பு சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இத் தீயின் மூலம் பாரிய வாகனநெறிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்ட விடயமாகும். Nike air jordan Sneakers | Asics Onitsuka Tiger