04th February 2020 10:30:54 Hours
54ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் டீ எஸ் டீ வெலிகல அவர்கள் 543ஆவது மற்றும் 573ஆவது படைப் பிரிவுகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளிற்கான கண்காணிப்பு விஜயத்தை ஜனவரி 29ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மேற்கொண்டார்.
இதன் போது வருகை தந்த 54ஆவது படைத் தலைமையக தளபதியவர்களுக்கு விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இப் படைப் பிரிவின் கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் இப் படைத் தலைமையக தளபதியவர்களுக்கு விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த படைத் தளபதியவர்களுக்கு மரநடுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டதனையடுத்து இப் படைப் பிரிவின் வளாகத்தில் படைத் தளபதியவர்களால் மரக் கன்று நடப்பட்டது. trace affiliate link | Nike Shoes