Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2020 12:14:00 Hours

72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் மற்றும் படையணிகளின் ஒத்திகை நிகழ்வு

கொழும்பில் 04 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைப் பெற இருக்கும் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 105 அதிகாரிகளும் 2910 இராணுவ படையினர்களும், கடற்படையின் 42 அதிகாரிகள் மற்றும் 638 கடற்படையினர்களும், விமானப்படையின் 42 அதிகாரிகளும் 582 விமானப்படையினர்களும், இலங்கை பொலிஸ் படையில் 32 பொலிஸ் அதிகாரிகளும்,469பொலிஸ் கான்ஸ்டபில், விசேட பொலிஸ் அதிரடி படையணியின் 15 அதிகாரிகள்,268 படையினர்களும் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 11 அதிகாரிகள் 363 படையினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த அணிவகுப்பு ஒத்திகையில் அதிகாரிகள், படையினர்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில்கள் 247 அதிகாரிகளும் 5260 படையினர்களும் கலந்துகொண்டனர். பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உட்பட ஏனைய படைத் தளபதிகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு தினைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த ஒத்திகையினை பார்வையிட்டனர்.

மேலும், இலங்கை இராணுவத்தின் மொத்தம் 25 அதிகாரிகள் மற்றும் 153 படையினர்களும், இலங்கை கடற்படையின் 02 அதிகாரிகள் மற்றும் 32 கடற்படையினரும், இலங்கை விமானப்படையின் 11 அதிகாரிகள் மற்றும் 86 விமானப் படையினரும், இலங்கை பொலிஸ் படையில் 10 அதிகாரிகள் மற்றும் 18 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இலங்கை விசேட பொலிஸ் அதிரடி படையணியின் 20 அதிகாரிகள் மற்றும் 124 படையினர்களும், 154 வாகனங்களில் வாகன அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

இந்த அணிவகுப்பில் முப் படையினர்,பொலிஸ், விசேட பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு தினைக்களத்தினர் உட்பட 5988 கலந்துகொண்டனர். latest Running | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger