31st January 2020 13:58:31 Hours
ஓய்வு பெற்று செல்லும் வினியோக தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.ஜி. டி சிரிசேன அவர்கள் பதில் பாதுகாப்பு பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையக அலுவலகத்தில் வைத்து இம் மாதம் 31 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமாக சந்தித்த அவர் இராணுவத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
மூன்று தசாப்த காலமாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் டி.கே.ஜி. டி சிரிசேன மற்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இருவரும் கடந்த கால அனுபவங்கள் தொடர்பாக எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட இராணுவ அதிகாரி அவர்கள் இராணுவ தளபதியின் விருப்பத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இறுதியில், லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்களால் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் வழங்கிவைத்தார். Running sports | Nike React Element 87