Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2020 09:42:33 Hours

ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட இராணுவ அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்கள் பதில் பாதுகாப்பு தலைமை பிரதாணி மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை வியாழக்கிழமை 30 ஆம் திகதி இராணுவ தலைமையக அலுவலகத்தில் சந்தித்தார். மேலும் இராணுவத்தின் வளர்சிக்கு அவராற்றிய பங்களிப்புக்காக இராணுவத் தளபதி தனது பாராட்டினை தெரிவித்தார்.

மூன்று தசாப்த காலமாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து மற்றும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இருவரும் கடந்த கால அனுபவங்கள் தொடர்பாக எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட இராணுவ அதிகாரி அவர்கள் இராணுவ தளபதியின் விருப்பத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். இறுதியில், லெப்டினன் ஜெனரல் சில்வா அவர்களால் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு சின்னம் வழங்கிவைத்தார்.

பொறிமுறை காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்கள் தனது பதவி காலத்தில் இராணுவ ஊடக பணிப்பகத்தின் பணிப்பாளரும் இராணுவ பேச்சாளராகவும் பல படைப் பிரிவுகளில் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும். best Running shoes | Women's Designer Sneakers - Luxury Shopping