18th January 2020 08:45:40 Hours
தடுப்பு மருந்துகள் மற்றும் மன ஆரோக்கிய பணியகம் மற்றும் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட பயிற்சி திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (17) ஆம் திகதி இடம்பெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் K.N.N கொஷ்தா அவர்களது தலைமையில் இந்த பயிற்சி திட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பயிற்சி பட்டறையில் முல்லைத்தீவைச் சேர்ந்த 27 அதிகாரிகளும், வன்னியைச் சேர்ந்த 17 அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.
கோட்பாட்டு அறிவுக்கு மேலதிகமாக, அந்த பயிற்சியாளர்கள் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சை பயிற்சிகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | Nike Shoes