10th December 2019 16:30:48 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21, 213 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் வவுனியாவிலுள்ள குஞ்சினூர் குளம், குளிக்குட்டி குளங்களில் ஏற்பட்ட நீர் கசிவுகளை தடுக்கும் நோக்கத்துடன் குளக்கட்டு புணரமைப்பு பணிகள் இம் மாதம் (7) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் K. A. N ரஷிக குமார அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
குளங்களுக்கு அருகாமையில் 100 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருவதாகவும் இராணுவத்தினரது இந்த பணிகளின் நிமித்தம் பாதிப்புக்கு உள்ளாகவிருந்த இந்த பொதுமக்கள் இராணுவத்தினருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர். Running Sneakers Store | Sneakers