08th December 2019 16:08:09 Hours
தாய் நாட்டிற்காக உயிர் நீத்த போர் வீரர்களை நினைவு கூறும் முகமாக அநுராதபுரத்தில் அமைந்துள்ள ‘மிரிஷ்வெட்டிய’ விகாரையில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (7) ஆம் திகதி மதவழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த மதவழிபாடுகள் ‘நெத் எப்எம்’ வானொலி சேவையில் நேரடி ஒளிபரப்புகளுடன் கஜபா படையணியின் பூரன ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அவயங்களை இழந்த விஷேட தேவையுள்ள வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மரியாதைக்குரிய ஈதலவெடுனுவேவ ஞானதிலக தேரர் அவர்களது தலைமையில் பௌத்த பக்தர்களின் பங்களிப்புடன் ஆசிர்வாத மதவழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த பௌத்த நிகழ்வுகளினூடாக புத்த பெருமானை அடையாளப்படுத்தும் முகமாக ‘துருதாரத’, ‘விருடா’, ‘விருபக்ஷா’ மற்றும் வைஷ்ராவன தொடர்பான சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து இராணுவ தளபதியின் தலைமையில் வெளிச்ச விளக்கு ‘ஷப்தா பூஜைகள் மரியாதைக்குரிய வல்பொல கோத்தாம தேரர் அவர்களது தலைமையில் ஆசிர்வாத மதவழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பிரித் தான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் ஏராளமான இராணுவ மூத்த அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் பௌத்த பக்தர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.jordan release date | Nike Off-White