25th November 2019 15:10:53 Hours
தெரன தொலைக்காட்சி புகழ் பெற்ற ‘ அம்மயி – துவயி (அம்மா மற்றும் மகள்) சிங்கள நாடகத்தில் நடித்த கலைஞர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுடன் இம் மாதம் (23) ஆம் திகதி ‘மிஹிந்து செத்மெதுருவிற்கு விஜயத்தை மேற்கொண்டார்கள்.
இராணுவ உதவி பணிமனை, மிஹிந்து செத்மெதுரு மற்றும் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வினூடாக மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களுக்கு பேசியா தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் ஓகன் கீபோட் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தெரன பேன்ட் இன்னிசை குழுவினர்கள் இன்னிசைகளை வழங்கி வைத்தனர். இலங்கையில் புகழ் பெற்ற கலைஞர்களான மாலினி பொன்சேகா, ஜசோதா விமலரத்ன, சதுருகிகா பீரிஸ் ,ரொஷான் ரணவக போன்றோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிக் கொண்டனர்.
மேலும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் W. S ராஜகருணா, மஹிந்துசெத்மெதுரு கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth