Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2019 19:02:06 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் வரிய குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கிவைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 553 ஆவது படைத் தலைமையகத்தின் 1ஆவது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் திறமையான படை வீரர்களை கொண்டு யாழ் அம்பன் பொட்பதியில் வசிக்கும் வரிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடானது 21 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

மேலும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கர வாதத்தை முற்றாக அழித்ததன் பின்னர், யாழ் தீபகற்பத்தில் யாழ் பாதுகாப்பு படையினரால் வரிய குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 698 ஆவது வீடாக இது காணப்படுகின்றது.

மேலும் இவ் வரிய குடும்பத்தின் தேவையினை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்களின் கவணத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து அவரினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டு கோளிற்கமைய, திரு காஷ்மியர் லியணகே அவர்கள் இவ் வீட்டு நிர்மாணத்திற்கான கட்டிட பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அனுசரணையினை வழங்கினார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 55ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய, 553ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் தன்னுடைய தொழில் நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி இவ்வீட்டை பூர்த்திசெய்தன.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த மனிதாபிமானமான நடவடிக்கையின் பின்னர் யாழ் தீபகற்பத்தில் யாழ் பாதுகாப்பு படையினரால், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளிகளின் அனுரசணையுடன் கடந்த பத்து வருடத்திற்குள் வரிய குடும்பங்களுக்காக 697 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இதில் பொட்பதியில் வசிக்கும் வரிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடானது 698 ஆவது வீடாகும்.

2009- 2019 வரையான காலப் பகுதியில் மொத்தமாக 700 வீடுகளாக பூரணப்படுத்தும் முகமாக, தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் மேலும் 02 வீடுகளை மிக விரைவில் வழங்க யாழ் பாதுகாப்பு படையினரால் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொட்பதியில் இடம்பெற்ற இப்புதிய வீட்டு திறப்பு விழாவில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி, நன்கொடையாளியின் பிரதிநிதிகள், மரதன்கேணி பிரதேச செயலக செயலாளர் திரு கே.கணகேஸ்வரன், படைப் பிரிவின் படைத் தளபதிகள் , யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது நிருவாக அதிகாரி, 551 மற்றும் 553 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் பயனாளியினரது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் இடம்பெற்ற கத்தோலிக்க சமய வழிபாடினைத் தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி இப்புதிய வீட்டினை குறித்த கடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.மேலும் படையினரின் இவ் மனிதாபிமானமான பங்களிப்புக்கு அக் குடும்பமானது தங்களது மனப்பூர்வமான நன்றியினைத் தெறிவித்துக்கொண்டனர்.Nike sneakers | NIKE HOMME