Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2019 21:31:15 Hours

புதிய இராணுவ தலைமையகத்தில் பௌத்த பிரித் பூஜை நிகழ்வுகள்

ஸ்ரீ ஜபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒருநாள் இரவு முழுவதும் 'பிரித்' பௌத்த பிரித் பூஜை நிகழ்வுகள் (08) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கோட்டைஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாமகா சங்கத்தின் இத்தேபனே ஸ்ரீ தம்மலங்கர தேரர், மகாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மகா சங்கத்தினரை பாரம்பரிய வெற்றிலை வழங்கிவரவேற்றார். மறுநாள் காலை (9) ஆம் திகதி வரை இப் பூஜைகள் இடம் பெற்றதுடன்,நாட்டின் மற்றும் சேவை பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்காக இதுபோன்ற ஒரு புதிய வளாகத்தை வைத்திருப்பதன் மதிப்பு பற்றியும், தேசத்தின் சிறந்த நலன்களுக்காக பாதுகாப்பு படையினரால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக மகாநாயக்க தேரர் அவர்களின் சுருக்கமான அனுஷாசன (சொற்பொழிவு) விரிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மறுநாள் காலையில் அதே இடத்தில் பௌத்த தேரர்களுக்கு ‘ஹீல் தான’ (காலை உணவு) வழங்கப்பட்டதுடன், புதிய இராணுவ தலைமையகத்தில் அன்றைய நடவடிக்கைகளை நிறைவு செய்தது. கோட்டை ராஜா மகா விஹாரையின் தலைமைதேரரானஅலுத்னுவர அனுருத்த நாயகே தேரர் அவர்கள் நாட்டிற்காக உயிர் நீத்த போர்வீரர்களுக்காகவும் மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராட்டிய அனைவரின் நலனுக்காக அவர்களை நினைவு படுத்தி இந்த நிகழ்வில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். short url link | Jordan Ανδρικά • Summer SALE έως -50%