Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd November 2019 13:13:08 Hours

முன்னால் எல்ரீரீஈ உறுப்பினர்களின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல்

புனர்வாழ்வு அளிக்கப்படாத தற்போது எல்ரீரீஈ உறுப்பினர் தங்களது வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தமது தேவைப்பாடுகளை தெரிவிக்கும் முகமாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுடனான கலந்துரையாடலானது இப் படைத் தலைமையகத்தில் கடந்த மாதம் புதன் கிழமை(30) இடம் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய மற்றும் 57ஆவது படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் பியல் டி சில்வா போன்றோரின் ஒருங்கிணைப்பில் இவ் விசேட கலந்துரையாடல் நிகழ்வானது முன்னால் போராளிகள் இருபது பேரின் பங்கேற்றலுடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இதன் போது இப் போராளிகளுடன் கலந்துரையாடிய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலையைமகம் மற்றும் 57ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள் போன்றோர் இவர்களது தேவைப்பாடுகள் தொடர்பாக விசாரித்தனர். இதன் போது இவர்களது தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் எதிர்காலத்திலும் இப் போராளிகல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்துடனான சிறந்த தொடர்புகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது. short url link | Nike