Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2019 13:48:18 Hours

மனிதாபிமான சட்ட பிரதிவாத போட்டிக்கு நடுவராக இராணுவ அதிகாரி பங்கேற்பு

14ஆவது படைப் பிரிவின் பதவிநிலை அதிகாரி -1 லெப்டினன்ட் கேர்ணல் நலின் ஹேரத் அவர்கள் நடுவராக 09ஆவது சர்வதேச மனிதாபிமான சட்ட பிரதிவாத போட்டியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் இராணுவத் தளபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய கலந்து கொண்டார்.

அந்த வகையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்ட பிரிவின் ஒத்துழைப்புடன் ஹென்ரி டூனன்ட் ஞாபகார்த் போட்டிகள் - 2019 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இப் போட்டிகள் போர் குற்றம் தொடர்பாக மாணவர்களால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்த்தில் வாதாடும் முறைகள் போன்றவற்றை உள்ளடக்கி இடம் பெற்றது. .

மேலும்;; கொழும்பு பேராதெனிய கொத்தலாவளை யாழ் அப்பிட் மற்றும் சிலிட் போன்ற அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளுக்கான இறுதி சுற்றானது ஒக்டோபர் 22ஆம் திகதி இடம் பெற்றதுடன் இலங்கையில் இடம் பெற்ற இப் போட்டிகளில் இராணுவ அதிகாரியவர்கள் கலந்து கொண்டமை இதுவே முதல் தடவையாகும். Sports News | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ