Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2019 15:40:43 Hours

பாதுகாப்பு சேவை கல்லூரி பரிசளிப்பு நிகழ்விற்கு இராணுவ தளபதி வருகை

கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது இம் மாதம் (23) ஆம் திகதி இக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்தார். இவரை இக்கல்லூரியின் அதிபர் திருமதி இந்திக பிரியதர்ஷனி அவர்கள் வரவேற்று கல்லூரியின் கெடற் மற்றும் பேன்ட் வாத்திய குழுவினர்கள் கௌர மரியாதையுடன் வரவேற்று சென்றனர்.

நிகழ்வில் முதல் அங்கமாக மங்கள விளக்குகள் ஏற்றி பின்னர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவு படுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இந்த மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களும் இராணுவ தளபதி அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வாழ்த்துறை இக்கல்லூரியின் தலைமை மாணவனினால் ஆற்றப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் மொரடுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் K.K.C.K பெரேரா, கல்வி திணைக்களத்தின் உயரதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றுக் கொண்டனர். latest Running Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD