Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2019 11:35:31 Hours

இராணுவ அதிகாரியினால் தயாரித்த முதல் மின் புத்தகம் இராணுவ தளபதியினால் வெளியீடு

பிரிகேடியர் லக்நாத் டி சில்வா தொகுத்த கவிதைகள் மற்றும் இசை உள்ளடக்கப்பட்ட இராணுவ அதிகாரி தயாரித்த முதல் மின் புத்தகம் 'மெஹியுமகா எராம்புமா' மற்றும் 'மாதா ஹிதேனா ஹெட்டி' ஆகியவை 'www.kdu.ac.lk' இன் முறையான பக்கங்களில் உள்ளிடப்பட்டுள்ளன.

இந்த மின் புத்தக திறப்பு விழாவானது இம் மாதம் (22) ஆம் திகதி மாலை கொதலாவல பாதுகாப்பு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து இந்த மின் புத்தகத்தை திறந்து வைத்தார்.

புகழ்பெற்ற பாடகியான திருமதி நிர்மல ரனதுங்க அவர்கள் இசைத்த ஒகோம தாமை ஜீவித்தே, நொபெனி யன ஒப கியா எனும் கீதங்கள்கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக இணையதளத்தின் ஊடாக வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய, இராணுவ உயரதிகாரிகள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்திருந்தனர். Running Sneakers Store | Nike Dunk - Collection - Sb-roscoff