Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2019 16:14:09 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வ அவர்கள் பதவியேற்பின் பின் 2019 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற் கொண்ட அவர் அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் இராணுவ பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அத்துடன் இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி அவர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினர்களால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவ தளபதி அவர்களால் தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்று நடப்பட்டது.

பின்னர் இராணுவத் தளபதி அவர்களால் புதிதாக கட்டப்பட்ட உடல் பயிற்சி கட்டிட நிலையத்தின் நினைவுப் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் உடல் பயிற்சி நிலையத்தின் அதன் வசதிகள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் இராணுவத் தளபதி அனைத்து படையினர்களிடமும் உரையாற்றினார். அத்துடன் மாறிவரும் புதிய உலகில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம், அனைத்து இராணுவ வீரர்களும் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பாதையை முன்னெடுக்க வேண்டும் என்பதை விளக்கினார். மேலும் அனைத்து இராணுவத்தினர்களினதும் நலன் தொடர்பாகவும் தங்களால் முடிந்ததைச் செய்வதையும் விரைவாக மாறிவரும் நடவடிக்கைகளை சந்திக்க இராணுவம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் உறுதிப்படுத்தி கலந்துரையாடினார்.Running sneakers | Gifts for Runners