27th August 2019 15:50:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 , 233 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மல்தெனிய கஞ்சிகாஹல் மாங்கேனி, பனிச்சங்கேனி மற்றும் வாகரையைச் சேர்ந்த பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இம் மாதம் (24) ஆம் திகதி அரலகன்வில நகரத்தில் வைத்து இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான அனுசரனை நிதிகளை கொடையாளியாளர்களான திருமதி இந்திரானி மாயாதுன்ன மற்றும் திரு சரத் மாயாதுன்னை போன்றோர் இந்த நிகழ்விற்கு வருகை தந்து வழங்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் R எல்விடிகல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். buy footwear | nike air jordan lebron 11 blue eyes black people