25th August 2019 23:35:31 Hours
புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (25) ஆம் திகதி காலை கண்டியிலுள்ள ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்பு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று நல்லாசிகளை பெற்றுக் கொண்டார்.
தலதா மாளிகைக்கு சென்ற இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியாரான திருமதி சுஜீவ நெல்ஷன் அவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் அலுவிஹார அவர்கள் வரவேற்றார்கள்.
இராணுவ தளபதி மற்றும் அவரது பாரியாரும் தலதா மாளிகையில் மல்லிகை மலர்களுடன் ஆசிர்வாத பூஜைகளில் ஈடுபட்டனர். பின்னர் தலதா மாளிகையின் திவ்வடன நிலம்பேயான திரு பிரதீப் நிலங்க தெல பண்டார அவர்களை சந்தித்து உரையாடலையும் மேற்கொண்டனர்.
பின்பு மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மதிப்புக்குரிய வரகாஹொட ஞானரத்ன தேரர் அவர்களை சந்தித்து நல்லாசிகளை பெற்றுக் கொண்டனர். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் இராணுவ தளபதி கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | New Balance 991 Footwear