16th July 2019 15:15:18 Hours
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் இந்திரஜித் பண்டார அவர்கள் 54 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (8) ஆம் திகதி மன்னாரிலுள்ள படைத் தலைமையகத்தில் தனது கடமையை சமய அனுஷ்டான ஆசிர்வாத த்துடன் உத்தியோகபூர்வமாக பாரமேற்றார்.
பின்னர் பதவியேற்ற புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டு தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளை தளபதிகள் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike footwear | jordan Release Dates