15th July 2019 20:45:51 Hours
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் பண்டுக பெரேரா அவர்கள் 563 ஆவது படைத் தலைமையகத்தின் 24 ஆவது கட்டளை தளபதியாக இம் மாதம் (11) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
இவருக்கு வவுனியா நாவட்குளத்தில் அமைந்துள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இராணுவத்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
இதற்கு முன்பிருந்த கட்டளை தளபதி கேர்ணல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் 112 படைத் தலைமயைகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதிய கட்டளை தளபதியின் பதவியேற்பு நிகழ்வில் 7, 21 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். bridgemedia | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals