27th May 2019 20:34:39 Hours
முன்னாள் கிரிக்கட் வீரன் திரு ரங்கன ஹேரத் சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், திரு தாரக ரண்வல அவர்களது அனுசரனையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூரண ஏற்பாட்டுடன் இரண்டு வீடுகள் நிர்மானிக்கும் இந்த கட்டிட நிர்மான பணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி வவுனியா, அகுனாகொச்சிய பிரதேசத்தில் ஆரம்பமானது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சுபசாதனை திட்டத்தின் கீழ் 6 வீடுகள் இதற்கு முன்பு குறைந்த வருமானத்தை பெற்று வரும் குடும்பங்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது தலைமையில் இந்த கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்து வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.
இந்த கட்டிட பணிகள் 56, 21 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லால் விஜயதுங்க, கேர்ணல் அணில் பீரிஸ் அவர்களது கண்காணிப்பின் கீழ் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறைந்த வருமானத்தை மேற்கொள்ளும் அகுனகொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த திரு எஸ் சஞ்ஜூவ சிறிசேன மற்றும் வவுனியாவைச் சேர்ந்த திரு கே ஏ எஸ் சரத் திலகரத்ன போன்றோருக்கு இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்படவுள்ளன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 6 வீடுகள் மதவாச்சி, வவுனியா, புல்லேலிய, மணல்ஆறு போன்ற பிரதேசங்களில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ