23rd April 2019 08:36:48 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட நலன்புரி திட்டத்தின் கீழ் குடா நாட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இங்கிலாந்தில் வசிக்கும் கொடையாளரான டொக்டர் வாசுகி ஹரிகரன் மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த டொக்டர் கோகுலேந்திரன் அவர்களின் அனுசரனையில் 9 சக்கர நாற்காலிகள் மற்றும் உயர்தரம், உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்புகளுக்காக மாணவியொருவருக்கு புலமைப்பரிசு நிதியாக 5000/= ரூபாயும் வழங்கி ஊக்கி வைக்கப்பட்டது.
மேலும் அன்றைய நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் இதய சிகிச்சையை மேற்கொண்ட திருமதி சிவமலா ராசலிங்கம் அவர்களுக்கு 10,000 ரூபாய் நிதியும் உலர் உணவு பொருட்களும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் , பொது மக்கள் கலந்து கொண்டனர்.Sports Shoes | Nike Shoes