Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd April 2019 15:31:49 Hours

பீரங்கிப் படையணியின் 131 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை பீரங்கிப் படையணியின் 131 ஆவது ஆண்டு நிறைவு விழா பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பீரங்கிப் படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அழைப்பையேற்று பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்திருந்தார்.

இந்த நிகழ்வின் முதல் அங்கமாக பீரங்கி படைத் தலைமையகத்தினுள் உயிர் நீத்த படை வீரர்களின்நிமித்தம் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி இரண்டு நிமிட மெளன அஞ்சலிகள் செலுத்தி படை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பீரங்கிப் படையணியின் மூத்த அதிகாரிகள், படையணியின் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர்கள், போர் வீரர்கள் மற்றும் மரனித்த படை வீரர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் அடுத்த நாள் (21) ஆம் திகதி மஹா சங்க தேரரின் தலைமையில் ‘பிரித் மன்டபாய’ தான நிகழ்வுகள் பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டயஸ், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளது பங்களிப்புடன் இடம்பெற்றது. Best Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ