22nd April 2019 10:42:34 Hours
யாழ்பாணத்தில் அமைந்துள்ள இடிகுறிச்சி சுப்ரமணியம் கல்லூரியின் விளையாட்டு மைதானமானது வரணி பிரதேத்தின் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின்அனுசரனையுடன் இராணுவத்தினரால் புதுபிக்கப்பட்டு கடந்த (17)ஆம் திகதி புதன் கிழமை ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வின் பின் மாணவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் நண்பரான UK யை சேர்ந்த திரு. தம்பு செல்வ குமார் அவர்களால் இந்த மைதானம் புதுபிப்பதற்கு கலந்துறையாடலை தொடர்ந்து வரணி இடிகுறிச்சி சுப்ரமணியம் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் நிரவாகத்தினரால் இதன் பழுதுபாக்கும் செலவு ஏற்பாடுசெய்யப்பட்டது. அதன்படி 551 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய இப் படைப்பிரிவின் படையினரால் தங்கள் தொழில்நுட்ப அறிவை அடிப்படையாகக் கொண்டுஅதன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.அத்துடன் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவன் அவர்கள் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றதுடன் மாணவர்களால் வட மாகாண ஆளுநருடன் ரிபன் வெட்டி இந்த மைதானம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் இப் பணிக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இந்த நிகழ்வில் விருது வழங்கப்பட்டது Running sports | Womens Shoes Footwear & Shoes Online