Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st April 2019 11:09:59 Hours

அவசர குண்டுவெடிப்பு இடங்களுக்கு இராணுவ படையினர் அனுப்பிவைப்பு

கொழும்பிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் உள்ள தேவாலயங்களிலும், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களிலும் வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களை வைத்தியசாலை கொண்டு செல்வதற்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் இதுவரையில் மேற்கு மற்றும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் இராணுவ படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று இராணுவ தலைமையகம் தெரிவத்துள்ளது.

கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய குண்டு தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொழும்பு வைத்தியசாலை தெற்கு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தவறான வதந்திகளால் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

அதேபோல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து படையினர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி முழுமையான கடமையில் ஈடுபட்டுள்ளன.

இராணுவம், கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப் படை மற்றும் ஏனைய சிறப்புப் படைப் பிரிவுகள் பொலிஸ் படையினருடன் இணைந்து ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்திவருகின்றன. Nike air jordan Sneakers | Nike for Men