Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2019 14:39:06 Hours

யாழ் படையினரால் கைவிடப்பட்ட வேளாண்மை துறையை மேம்படுத்துவதற்கு உதவிகள்

யாழ்ப்பாணம் மற்றும் வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாயிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இயந்திரங்கள் மற்றும் தேவையான மனிதவளங்களை பயன்படுத்தி வட்டுக்கோட்டையில் உள்ள அராலி செட்டியார்மடம் பெரியதம்பிரான் கோயிலுக்கு அருகாமையிலுள்ள விவசாய நீர் தேங்கல் தொட்டிகள் நிர்மானித்து திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதிமேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியைச் சந்தித்த பின்னர் இரு அமைப்புகளும், இந்த பண்ணை தொட்டியை புதுப்பிப்பதற்காக இராணுவ உதவியை நாடின. அந்த நீர் இதற்கு முன்பு தேவையற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது புறக்கணிக்கப்பட்ட பின்னர், விவசாயத் தேவைகளுக்கு விவசாயிகள் தொலைதூர பகுதிகளிலிருந்து நீர் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த தேவைகளின் நிமித்தம் இராணுவத்தினரது உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி , இந்திய தூதரகத்தின் உயரதிகாரி திரு எஸ் பாலசந்திரன் , 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன , இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate tracking url | GOLF NIKE SHOES