Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2019 22:39:52 Hours

யாழ் வறிய குடும்பத்திற்கான சுகாதார வசதிகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் ஏற்பாடு

சிவில் மற்றும் இராணுவ உறவுகளை, நல்லிணக்கம் ஒற்றுமை மற்றும் சமரசம் மூலம் மேலும் வலுப்படுத்தும் முகமாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு ஐக்கிய இராஜ்ய பிரஜைகளினால் 9 கழிவறைகள் மற்றும் புது வருட கொண்டாட்டத்திற்கான 75 உலர் உணவுப் பொதிகள் ஆகியவைக்கான அணுசரனையானது, ஆரியாலை பும்பைகர் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

ஐக்கியஇராஜ்யத்தில் வசிக்கும் புலம் பெயர் வைத்தியர். திருமதி வாசுகி ஹரிகரன் அவர்களின் நிதியுதவியுடன் உலர் உணவுப் பொதிகள் மற்றும் திரு.பிரபா லோகநாதன் அவர்களினால்; 9 கழிவறைகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியுதவியானது வழங்கப்பட்டன. மேலும் 523 ஆவது படையினரால் இவ் கழிவறையை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளானது, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக ஆலோசனைக்கமைவாக வழங்கப்பட்டன.

மேலும், கடந்த வியாழக் கிழமை (11) ஆம் திகதி 52 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியை பிரதிநிப்படுத்தி,523 ஆவது படையகத்தின் படைத் தளபதி கேணல் நிலந்த பெனான்டோ அவர்கள் குறித்த பொதிகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்ததோடு, கழிவறையை தொகுதியையும் திறந்து வைத்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படை வீரர்கள், மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.bridge media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE