14th March 2019 19:45:38 Hours
வெலிகந்தை பாகொடை (தாகொப) பௌத்தமத மையத்திற்கு 2ஆவது சமிக்ஞைப் படையினரால் மின்சார விளக்குகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க திரு துமிந்த ஜயவீர அவர்களின் நன்கொடையின் மூலம் வழங்கப்பட்டதோடு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களால் இம் மின்சார விளக்குகள் திறந்து வைக்கப்பட்டதோடு செத் பிரித் வழிபாடுகளும் இடம் பெற்றன.
இம் மின்சார விளக்கு தொழில்நுட்ப செயற்பாட்டை 2ஆவது சமிக்ஞைப் படையணியின் பொறியியல் தொழில்நுட்பவியலாளரான கெப்டன் ஹிமாஸ் ஜயசிங்க அவர்கள் இப் படையணியின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலிற்கமைய அமைத்தார்.
இந் நிகழ்வில் மகா சங்க தேரர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் பக்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். latest Nike release | Nike