Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2019 12:48:28 Hours

வன்னிப் படையினரின் ஒத்துழைப்புடன் பொதுமக்களுக்கு சக்கர நாற்காலி வண்டிகள் விநியோகம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிரிஷ்டல் மார்டின் காமன்ட் தொழிற்சாலையின் அனுசரனையில் வன்னி பிரதேசத்தில் வாழும் விஷேட தேவையுடைய 12 நபர்களுக்கு சக்கர நாற்காலிகள் விநியோகிக்கப்பட்டன.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த சக்கர நாற்காலிகள் விநியோகிக்கப்பட்டன.

இம் மாதம் (19) ஆம் திகதி நவமி போயா தினத்தை முன்னிட்டு 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் சேனா வடுகே, கேர்ணல் இந்து சமரகோன் மற்றும் கிரிஷ்டல் மார்டின் காமன்ட் தொழிற்சாலையின் பொது முகாமையாளார் திரு வயி .பீ நிஷாந்த அவர்கள் இணைந்து சக்கர நாற்காலி வண்டிகளை வழங்கி வைத்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 56 ஆவது படைப் பிரிவின் தலைமையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online