09th February 2019 11:00:32 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் தலைமையிலான படையினர் தியத்தலாவை நகரப்புரம் வை சந்தி பண்டாரவளை ஹப்பத்தளை பிரதான வீதி போன்றவற்றில் சிரமதானப் பணிகளை கடந்த வெள்ளிக் கிழமை (08) மேற்கொண்டனர். இச் சிரமதானப் பணிகளை இரு அதிகாரிகளின் தலைமையில் 22 இராணுவத்தினர் மேற்கொண்டதுடன் வீதிப் புரத்தில் காணப்படும் பொலித்தீன் பைகளை சுத்தப்படுத்தினர்.
அதேவேளை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகமானது உலகலாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட 5ளு திட்டத்தை படையினருக்கு வெளிக்கொனரும் முகமான இரு நாள் கருத்தரங்கை (பெப்ரவரி 6- 7)தியத்தலாவையில் 20 அதிகாரிகள் உள்ளடங்களாக 900 படையினருக்கு நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் கருத்தரங்கை மதுல விந்தனாராச்சி சுகத் திஸாநாயக்க தரிந்து மாரசிங்க மற்றும் சுதத் அபேசிங்க போன்றோர் நிகழ்த்தியதுடன் இந் நிகழ்வுகளை மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் கண்காணித்தார். Running sneakers | nike air force 1 shadow , eBay