Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2019 15:37:00 Hours

புலேளியவில் புதிய வீடு நிர்மாணிப்பு

மதவாச்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புலேளிய கிராமத்தை சேர்ந்த உதவியற்ற குடும்பத்திற்கு பம்பலபிட்டிய ராஜா தனியார் வரையறுக்கப் பட்ட நிறுவனத்தினால் 21 வது வன்னி பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் புதிய வீடொன்று விரைவில் வழங்கப்பட உள்ளது.

21 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் குமார் ஜயபத்திரன அவர்களின் வழிகாட்டளின் கீழ் 5 வது இலங்கை இலேசாயூத காலாட் படை மற்றும் 213 படைப் பிரிவின் 2 வது இயந்திர காலாட் படையூம் சேர்ந்து பிரிகேடியர் மனோஜ் லமஹேவாவின் கட்டளையின் கீழ் குறிப்பிட்ட வர்த்தகத் துறையின் அனுசரையூடனான இவ் வேலைத் திட்டத்தினை சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் முடிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இவ் வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய் கிழமை (15) ஆம் திகதியன்று குறிப்பிட்ட குடும்பத்தின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மேலும் வன்னி இராணுவப் படையினால் பொறுப்பேற்ற இவ் மனிதாபிமான வேலைத் திட்டத்திற்கான நிதியூதவியானது ராஜா நிறுவனத்தின் தலைவரினால் வழங்கப்பட்டது.

மேலும் இவ் அடிக்கல் நாட்டும் விழாவின் போது வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சேனா வடுகே 212 மற்றும் 213 வது பிரிவின் படைத் தளபதிகள் ராஜா நிறுவனத்தின் பிரதி நிதிகள் உயர் அதிகாரிகள் மற்றும் ஆணை பெறாத அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Sports Shoes | Mens Flynit Trainers