Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2018 15:27:38 Hours

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவித்து ‘ஆலோக விளக்கு பூஜைகள்

தேசிய படை வீரர்கள் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு களனி ஶ்ரீ மஹா விகாரையில் 19 ஆம் திகதி இரவு ‘ ஆலோக்க விளக்கு பூஜை’ இடம்பெற்றன.

இந்த பூஜையில் 28,619 விளக்குகள் எரிக்கப்பட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யப்பட்ட படை வீரர்களுகளது ஆத்மா சாந்திக்காக இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது அவர்களின் முழுமையான ஏற்பாட்டுடன் மேன்மை தங்கிய ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது ஆசிர்வாதத்துடன் கிலன்பச பௌத்த சமய பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த பௌத்த பூஜை நிகழ்வுகள் கொல்லுப்பிடிய மஹிந்த சங்கரகித்த நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

bridgemedia | AIR MAX PLUS