13th June 2025 13:21:44 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜூன் 12 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2 வது (தொ) இலங்கை சமிக்ஞை படையணி, 3 வது (தொ) இராணுவ புலனாய்வு படையணி மற்றும் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.
ஒவ்வொரு இடத்திலும் தளபதியை அந்தந்த கட்டளை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர். ஒவ்வொரு விஜயத்தின் போதும் விரிவான விளக்கவுரை மற்றும் படையினருக்கான உரை ஆகியவை அடங்கியிருந்தது. அங்கு தளபதி ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் தொண்டர் சேவையுடன் தொடர்புடைய பெருமை ஆகியவற்றை எடுத்துரைத்தார். மேலும் அரசாங்கத்தின் "தூய இலங்கை" திட்டத்தை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வின் அடையாளமாக அவர் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார். விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.