09th June 2025 19:09:00 Hours
தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஜூன் 09 அன்று இராணுவத் தலைமையகத்தில் பாராட்டினார்.
இலங்கை இராணுவ தடகள அணியின் ஐந்து பெண் மற்றும் ஆறு ஆண்கள் அடங்கிய தடகள வீரர்கள் அவர்களின் பாராட்டத்தக்க சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். சாதனையாளர்களில் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சாஜன் ஆர். நதீஷா மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பெண் சிப்பாய் எம்எச்ஜே உத்தரா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் மகளிர் 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றனர். 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூஏஎம்ஆர் விஜேசூரிய 10,000 மீட்டர் ஓட்டத்தில் 6 வது இடத்தைப் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார். 2 வது (தொண்டர்) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II எச்கேகே குமாரகே 400 மீட்டர் ஓட்டத்திலும் 4x400 மீட்டர் அஞ்சலோட்த்திலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இராணுவத்திற்கு பெருமை சேர்த்தார்.
விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தேசத்தின் முன்மாதிரியான பிரதிநிதித்துவத்திற்காக பாராட்டு தெரிவித்த இராணுவத் தளபதி அவர்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, இராணுவத் தளபதி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசுகள் மற்றும் நிதி ஊக்கத்தொகைகளை வழங்கினார், உலக அரங்கில் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபட அவர்களை ஊக்குவித்தார். அவர்களின் எதிர்கால போட்டிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவ தடகளக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கேஏடிசீஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.