Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2025 15:16:51 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரேஷா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 4வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் ஏற்பாட்டில் புத்தூர் புனித லூக்கா முதியோர் இல்லத்தில் 2025 மே 31 அன்று ஒரு நன்கொடை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் போது, முதியோர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள் மற்றும் புதிய மெத்தைகள் விநியோகிக்கப்பட்டன.

இலங்கை இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.