Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2025 13:13:26 Hours

ஜனாதிபதி மிஹிந்து செத் மெதுர நல விடுதிக்கு விஜயம்

16 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2025 மே 19 அன்று அத்திட்டிய ‘மிஹிந்து செத் மெதுர’ நல விடுதியிலுள்ள போர் வீரர்களை சந்தித்தார்.

வருகை தந்த ஜனாதிபதிக்கு நுழைவாயிலில் சம்பிரதாய வாகன தொடரனி மரியாதை செலுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொன்தா (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ (இரண்டு பார்கள்) ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எம்எம்எஸ்சீ (மூலோபாய கற்கைகள் – சீனா) எம்எஸ்சீ (பாதுகாப்பு கற்கைகள்) முகாமைத்துவம் எம்எஸ்சீ (பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள்) எப்என்டியூ (சீனா) பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோருடன் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து அவரை அன்புடன் வரவேற்றனர்.

பின்னர் ஜனாதிபதி நலவிடுதியை பார்வையிட்டு, அங்குள்ள போர் வீரர்களுடன் கலந்துரையாடினார். நல விடுதியில் படுக்கையில் இருக்கும் போர் வீர்ர்களுக்கு பரிசு வவுச்சர்கள் வழங்கினார்.

விஜயத்தின் போது, ஒரு போர் வீரரால் உருவாக்கப்பட்ட சிறப்பு கைவினைப்பொருள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி போர் வீரர்களுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அவர்களுடன் நட்பு மற்றும் இதயப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். மிஹிந்து செத் மெதுர நலவிடுதியின் பணி, சேவை மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டும் சிறப்பு ஆவணப்படமும் கூடியிருந்தவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னர், நாட்டின் போர் வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் பாராட்டி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு கருத்துகளை பதிவிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர், மிஹிந்து செத் மெதுர நல விடுதியின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

(படம் மற்றும் கட்டுரை: www.presidentsoffice.gov.lk)