Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2025 11:30:31 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வெசாக் பண்டிகை கொண்டாட்டம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 மே 12 ஆம் திகதி வெசாக் பண்டிகையைக் கொண்டாடியது.

யாழ். பாதுகாப்புப் படையின் படையினர் 'டி' சந்தி, அருகிலுள்ள வீதி மற்றும் இராணுவ நிறுவனங்களை வெசாக் கூடுகளால் அலங்கரித்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் 2025 மே 13 ஆம் திகதி 'டி' சந்தியில் வெசாக் கூடு போட்டியும் நடைபெற்றது.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.