10th April 2025 13:05:16 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கள மருத்துவமனையில் 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு மன்னார் மாவட்ட மருத்துவமனை இரத்த வங்கியின் மருத்துவ ஊழியர்கள் ஆதரவு வழங்கினர்.
இந்தப் பிரதேசத்தின் இரத்த விநியோக பற்றாகுறை காரணமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தை சேர்ந்த மொத்தம் 118 அதிகாரிகள் மற்றும் படையினர் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.