10th April 2025 13:53:39 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தனது 144 வது ஆண்டு நிறைவை 2025 ஏப்ரல் 01 அன்று மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெருமையுடன் கொண்டாடியது.
வருகை தந்த தளபதிக்கு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் அனைத்து நிலையினருடான மதிய உணவில் கலந்து கொண்டு படையினருக்கு உரையாற்றினார்.
2025 மார்ச் 24, அன்று, ஹங்வெல்ல அஸ்ம்ப்ஷன் மாதா தேவாலயத்தில் வண. பாரிஷ் பாதிரியாரால் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து மாலையில் ஹங்வெல்ல ஜும்மா பள்ளியில் தலைமை மௌலவியால் சிறப்பு பிரார்த்தனை அமர்வும் நடத்தப்பட்டது.
2025 மார்ச் 27, அன்று, பிரித் பாராயணம், அதைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு தானம் வழங்களும் இடம்பெற்றது.
தொடர் நிகழ்வுகளுடன் 2025 மார்ச் 25, அன்று சாந்த செவன முதியோர் இல்லத்தில் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டது, மேலும் 2025 மார்ச் 26, அன்று முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஆண்டு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.