08th April 2025 12:57:26 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎம்பீடபிள்யூடபிள்யூபிஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 வது காலாட் படைப்பிரிவு தனது 37 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடியது.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அத்துடன் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் முகாம் வளாகத்தில் கிரிக்கெட் போட்டி நடாத்தப்பட்டதுடன் ருவன்வெலி மகா சேயவில் போதி பூஜையும் நடாத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றனர்.