Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2025 21:10:41 Hours

வெளிச்செல்லும் இலங்கை இராணுவ சேவை படையணியின் படைத்தளபதிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ சேவைப் படையணியினால் வெளிச்செல்லும் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களுக்கு, 2025 மார்ச் 11 அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை நிலைய தளபதி அன்புடன் வரவேற்றதுடன், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. படையினருக்கு உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ தனது பணி முழுவதும் உறுதியான ஆதரவிற்காக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டும் விதமாக, வெளிச்செல்லும் படைத்தளபதிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.