15th March 2025 13:50:46 Hours
முதலாம் படையின் 6 வது தளபதியான மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ. மகாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு, முதலாம் படை படையினர், கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் 2025 மார்ச் 10 ஆம் திகதி நடைபெற்ற இராணுவ சம்பிரதாய நிகழ்வில் பிரியாவிடை அளித்தனர்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு, 3 வது கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. படையினருக்கு உரையாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், நிறுவனத்தின் நன்மை மற்றும் நற்பெயருக்காக அவர்களின் அர்ப்பணிப்பைப் பேண அவர்களை ஊக்குவித்தார்.