Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2025 12:18:46 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் நன்கொடை வழங்கல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு தரண அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 27 அன்று பொலன்னறுவையில் உள்ள பரகும் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் தரண அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.