Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2025 10:36:01 Hours

23 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

23 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.எஸ் சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 2025 பெப்ரவரி 18 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அதை தொடர்ந்து 23 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் பணியாளர் விளக்கத்தின் போது பொறுப்புப் பகுதி குறித்த விளக்கங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.