Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2025 13:59:42 Hours

இஇகாப சேவை வனிதையரால் செயற்கை உறுப்புகள் மற்றும் ஆர்தோடிக்ஸ் நிலையத்திற்கு குடிநீர் போத்தல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2025 ஜனவரி 21 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் உறுப்புகள் மற்றும் ஆர்தோடிக்ஸ் நிலைய தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனைக்கு 700 குடிநீர் போத்தல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நன்கொடை செயற்கை உறுப்புகள் மற்றும் ஆர்தோடிக்ஸ் நிலையத்தின் தளபதியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.