11th February 2025 14:00:53 Hours
ஹோமாகம, மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான காளான் வளர்ப்பு குறித்த சுயதொழில் திட்டம், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2025 ஜனவரி 30 அன்று நடாத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, செயலமர்வு மற்றும் நடைமுறை பயிற்சி நடாத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.