Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2025 18:52:56 Hours

53 வது காலாட் படைப்பிரிவினால் மர நடுகை திட்டம்

53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 53 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 77 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு "தேசிய மறுமலர்ச்சிக்காக அணிவகுப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் மர நடுகை திட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் வகையில் வளாகத்தில் 400 எலுமிச்சை செடிகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.